முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Instagram Reelsல் கெத்தான பெண்கள்... கேலிக்கூத்தாகும் ஆண்கள்

எப்போது ரீல்ஸ் (Reels) பார்த்தாலும் அதில் பெண்களின் கவர்ச்சி ரீல்ஸ் , ஆண்களுக்கு அதற்கு வாய்ப்பில்லை... அதனால் சில கேலிக்கூத்துகளை செய்து வரும் ரீல்ஸ் ஒரு பக்கம். இரண்டுமே கண்களில் படும். இதனை தாண்டி சில முத்துக்கள்  அரிதாய். 

முதலில் பெண்கள். அவர்கள் அவர்களின் கவர்ச்சியை நம்பியே வருகிறார்கள். இப்படியெல்லாம் சம்பாதிக்கலாமா என்றால் இந்த கேள்வியை நடிகைகள் படத்தில் காட்டிய கவர்ச்சியில் கேட்டிருக்க வேண்டும். அதன் தொடர்ச்சி தான் இந்த ரீல்ஸ்கள். ஏன் யாரோ கட் சொல்லி வருவது மட்டுந்தான் நடிப்பா... சம்பாத்தியமா , அவர்களே கட் சொல்லி மொபைலில் எடுத்தால் அது தவறாகிவிடுமா ? 


எதனை சொல்லி அவர்களை மதங்கள் அடக்கியதோ அதனை முன் வைத்து இப்போது சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார்கள். சும்மா திட்டிக்கலாம்... அங்கே அத்தனை லட்சம் வியூ ஆகுதே.... அதெல்லாம் பார்க்கிறது யாரு ? கீழே கமெண்ட் செக்சன் பாத்தா நம்ம கலாச்சாரம் பண்பாடு எல்லாம் தெரியும். அக்கா உங்க கூட ஒரு நாள்.... நு பல கமெண்ட்... டேய் அக்கா கூட எப்டிடானு கேட்க தோணுது. இந்த மாதிரி வீடியோ போடும் “அக்கா”களுக்கு ஃபாலோயர் யாருனு எட்டிப்பாருங்க.. உங்க நண்பர்கள் சிலர் இருப்பார்கள். மீதி எல்லாம் ஃபேக் ஐடில இருப்பாங்க. 


இது சரியா தப்பா என்றால் அது அப்படித்தான்... சரி தப்பு சொல்ல நாம யாரு... 

பணம் தான் மரியாதைனு ஆனபிறகு, பணம் இருந்தால் தான் கொஞ்சமாச்சும் சுயமரியாதையோடு வாழ முடியும்னு சமூகம் உருவாகும் போது அப்படித்தான் நடக்கும். ஒரே வழி நீங்க பிளாக் செஞ்சுட்டு போறது. இல்ல நீங்களும் பார்த்துட்டு போறது.

அய்யோ குழந்தைகள் எதிர்காலம்னு வருத்தப்பட்டா.. கண்டிப்பா அது வருத்தம் இல்லை பொறாமை. நா ஒரு பிட் படம் பார்க்க ஊர் கோடியில உள்ள தியேட்டருக்கு போனேனு சொல்லும் தலை முறையும், இந்த மாதிரி எல்லாம் பார்க்க புரெசிங் செண்டர் போனேன் சொல்லும் தலைமுறையும் தான்.... இல்லாட்டி ரீல்ஸ் பார்த்து வீடியோ பார்த்துட்டு வந்து புலம்பும் நவீன நல்லவர்களாக தான் இருக்கும்... 

நானும் ஒரு காலத்தில் இந்த மாதிரி பக்கங்களை ரிப்பொர்ட் அடிச்சேன்.. ஆனா அல்காரிதம் அதை எல்லாம் கொசுறா கூட மதிக்கல... அப்ப தான் சில விசயம் யோசிச்சேன்.. புரிஞ்சது...

இதுல ஆண்கள் நிலைமைதான் பாவம்... தன்னை கோமாளியாக்கினா தான் நிக்க முடியும்னு தெரிஞ்சு அதைதான் பலரும் செய்றாங்க. அதுக்கும் லட்சகணக்கில வியூவும் வருது. இதை தாண்டி பேமிலியா ஒரு சில டிராமா செய்றாங்க.. சில வொர்க் அவுட் ஆகுது, சில எரிச்சலாதான் இருக்கு.....

இது எல்லாமே அவங்க சுயமா தெளிவான நிலையில தான் செய்றாங்க.. ஒரே காரணம்.. பணம்... இது இன்னும் செமய போகுமே தவிர கட்டுக்குள் வர வாய்ப்பில்லை... ஒன்னு ஜோதில கலந்துகோங்க, இல்லை கண்டுக்காம போங்க.. தேவையில்லாம டென்சன் ஆகாதீங்க.... அல்ரெடி தமிழ்நாட்ல பிபிக்கு நிறைய காரணம் இருக்கு. இதுக்காக உடம்ப கெடுத்துக்க வேண்டாம்... உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இது நடந்துகிட்டே தான் இருக்கு. 
எதை பலகீனம்னு சொல்லி அடக்கி வைக்கிறோமோ அந்த பலகீனம் தான் நம்மை அடிமையாக்கும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...